கவிதை 360 காதல் வெண்பா

 13) காதல் வெண்பா 

..... 

இனியவன் காதல் வெண்பா

.....
எங்கே வருகிறாய் ஏங்கி துடிக்குது - இதயம் 
அங்கேயே சுழன்று தெரியுது மனசு -நீ 
பூவுக்குள் உதயமாகியவள் - நீ அனுமதித்தால் 
பூ மாலையாக மாற துடிக்கிறேன் ....!!!. 

....

அன்ன நடை நடந்து என்னை கொன்றவளே 
அன்னம் தண்ணியில்லாமல் தவிக்க வைத்தவளே 
உள்ளம் ஒரு காதல் கோயிலடி - அதில் நீ 
உள்ளிருக்கும் கருவறை தெய்வமடி....!!! 

.....

சொல்லாமல் கொள்ளாமல் இதயத்தில் நுழைந்து 
கொல்லாமல் கொல்லுகிறாய் விடலை என்னை 
சித்தியை துணைக்கு அழைத்துவந்து -இதயத்தை 
சித்தரவதை முகாம் ஆக்கி விட்டாய் .....!!! 

....

விழி அழகி என்று நீ பெயர் கொண்டதாலோ 
விழி மூடாமல் என்னை செய்து விட்டாய் 
தெருவெங்கும் நிற்கும் மாந்தரெல்லாம் -உன் 
திருமுகமாய் தெரிய என்ன செய்தாய் ...? 

....

காலமெல்லாம் காத்திருப்பேன் உனக்காக 
காலனிடம் கெஞ்சி கேட்பேன் என் ஆயுளை 
மாதவம் செய்தேனும் உனை அடைவேன் -அன்றேல் 
மாண்டு விடுவேன் உன் காலடியில் மண்ணிட்டு...!!! 


கவி நாட்டியரசர் இனியவன் 
காதல் வெண்பா
.... 

முதல் அடியின் ஓசை இரண்டாம் அடியிலும் வரவேண்டும் 

கருத்துகள்

கவிப்புயல் இனியவன்

கவிதை 360 சமூக விழிப்புணர்வு கவிதை

கவிதை 360 கிறிஸ்மஸ் வாழ்த்துக்கவிதை

கவிதை 360 தன்னம்பிக்கை கவிதை