இடுகைகள்

நவம்பர் 24, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிதை 360 ஹைபுன் கவிதை

 ஹைபுன்  ஜப்பானிய மொழியில் ஹைக்கூவிற்குப் புகழ்பெற்ற பாஷோ என்பவர் ஹைபுன் கவிதையை முதன் முதலாக எழுதியுள்ளதாக அறியப்படுகிறது. தமிழில் முதன் முதலாக அறுவடை நாளில் மழை(2003), மாய வரம் (2006) தலைக்கு மேல் நிழல் (2007) என்ற ஹைபுன் கவிதை தொகுதிகள் வெளிந்துள்ளன. ..... இதன் மரபு.....  ஒரு கதை, சிறுகதை, கட்டுரை, பேட்டி, விமர்சனம், இதில் ஏதாவது ஒன்றை எழுதி அதற்கு பொருத்தமான ஹைக்கூ ஒன்றை உருவாக்கவேண்டும் .....  கவிப்புயல் இனியவன் ஹைபுன்  காத்திருப்பேன் அவள் வருவாள் .. பக்கத்தில் அவள் அண்ணன் ... சைக்கிளில் வருவார் .. அருகிலே செல்வேன் .. கண்ணால் கதைப்பேன் .. அவள் யாடையால் கதைப்பாள் .. அண்ணன் கிட்டவரும் போது.. என் நடை வேகமாகும் ... பாடசாலைதான் எனக்கு காதல் சாலை .. கொப்பியை பரிமாறும் போது .. கடிதமும் பரிமாறும் ... விழுந்தது கடிதம் நிலத்தில் .. கண்டார் ஆசிரியர் தந்தார் .. முதுகில் நல்ல பூசை .. நண்பர்கள் கிண்டல் நண்பிகள் அவளை கிண்டல் .. காலம் காதலாகியது .. கல்வி கரைக்கு வந்தது .. காதலும் கரைக்கு வந்தது  ^ பள்ளி காதல் தொடரும் பள்ளிவரை இல்லை பள்ளி படலை வரை ..... கவிப்புயல் இனியவன் ஹைபுன் 02 ........... தாத

கவிதை 360 குறட்கூக்கள்

குறட்கூ கவிதைகள் ............ புதுக்கவிதையின் பரிணாமத்தில் புதுவகை இக் குறட்கூ. குறள் போல் கூவுவதால் குறட்கூ. திருவள்ளுவரின் குறள் இரண்டு அடிகளில் ஏழு சீர்களில் கருத்துக்களை எடுத்துரைக்கிறது.   குறட்கூ இரண்டு அடிகளில் மொத்தம் நான்கே சீர்களில் (முதலடியில் இரண்டு சீர்கள் இரண்டாம் அடியில் இரண்டு சீர்கள்) கருத்துக்களை எடுத்துரைக்கிறது.  கவிஞர் தனிகைச்செல்வனின் தமிழின் முதல் குறட்கூ வகைக் கவிதைகளைத் தொடர்ந்து, முனைவர் ம. ரமேஷ் என்பவர் எழுதினார்.  .... திருமணம் சுபமுகூர்த்தத்தில் நிறைவேறியது.  காதல் கரிநாள் ஆனது  ..... 2) உறவுகள் பறிபோனது.  காதல் வந்தது.  ... 3) நொடி மூச்சு நிலையில்லை.  காதல் நிலையானது.  .. 4) கண்ணால் காதல் வந்தது.  இதயம் நொறுங்கிப்போனது.  .. 5) நித்திரையில் சிரித்தேன்.  திட்டி எழுப்பினார் அம்மா  @ கவிப்புயல் இனியவன் 

கவிதை 360 லிமரைக்கூக்கள்

லிமரைக்கூ (லிமரிக் ) ஆங்கிலத்தில் லிமரிக் என்பது ஒரு கவிதை வடிவம் ஆகும். 5 அடிகளை கொண்ட இந்த கவிதையை தமிழில் ஈரோடு தமிழன்பன் எழுதியுள்ளார்.  .... வேடிக்கை, வினோதம், நகைச்சுவை, சமூக விழிப்புணர்வு வகையில் எழுதலாம்.  .... ஹைக்கூ மற்றும் சென்றியு என்ற இரண்டும் கலந்தது  .... இதன் மரபு  1) மூன்று அடிகளை கொண்டது.  2) முதல் அடியில் 3 சொற்கள்  3) இரண்டாம் அடியில் 4சொற்கள்  4) மூன்றாம் அடியில் 3சொற்கள்  5) முதல் அடியின் இறுதி சொல்லும் 3ம் அடியின் இறுதி சொல்லும் "ரைமிங்கில் " வரவேண்டும்  .... முற்களின் நடுவே ரோஜா இரத்தம் கையில் வடிய பறித்து கொடுத்தார் காதலியின் ராஜா ^^^ மாப்பிளைக்கும் பணம் காலமாய் காதல் செய்தவரின் மாறியது குணம் ... அரச துறையில் தனியார்  தொழில் சங்க தலைவர் இரட்டை வேஷம்  இவரை கேட்போர் இனியார் ... ஜீரணத்துக்கு குடித்தான் மல்லி  கட்டுப்படுத்த முடியாத விலை உயர்வு  இழைத்து போனது உடல் ஒல்லி ..... இழுத்து கொன்றது உன் பார்வை விழித்து படித்து கண்டதொன்றுமில்லை  இழந்து விட்டேன் பள்ளி தேர்வை

கவிதை 360 சென்றியுக்கள்

 முகநூலில் காதல் நான் யாரையும் காதலிக்கவில்லை மறுபக்கத்தில் பழைய காதலி ^^^ தொடர்ந்து பாடும் தொண்டைகட்டாது ரேடியோ ^^^ சத்தியம் கேட்டு சலித்துவிட்டார் கடவுள் குடிகாரன் ^^^ நவீன சுயம்பரம் நடைபெறுகிறது கல் பல் உடைக்கும் போட்டி போட்டியில் முதியவர் ^^ நேர அட்டவனை படி.  சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.  பள்ளி மாணவர்.  .....  பகலிரவு ஆட்டம்.  இரவு சூதாடம்.  பகல் கிரிக்கெட் ஆட்டம்.

கவிதை 360 ஹைக்கூ தொடர்

 அடியேன் 100 க்கும் மேற்பட்ட ஹைக்கூ எழுதியுள்ளேன் அவற்றில் சில....  ........... இட்ட முட்டை சுடுகிறது. எடுத்து சென்றாள் கருவுற்ற பெண். ஏக்கத்தோடு பார்த்தது கோழி. ^^^ கடத்தல்காரன் கையில் பணம். வன அதிகாரிகள் பாராமுகம். ஓடமுடியாமல் தவிர்க்கும் மரம். ^^^ காடழிப்பு. ஆற்று நீர் ஆவியானது. புலம்பெயரும் அகதியானது கொக்கு. ^^^ குடும்ப தலைவர் மரணம். ஒன்பது பிள்ளைகளும் ஓலம். கருத்தடை நாயின் சாபம்.  ^^^ சட்டம் ஒரு இருட்டறை கருவறை இருட்டறை சிசு மர்மக்கொலை ^^^^^ வியர்வை சிந்தாமல் வேண்டாம். வியர்வை உலர்ந்தபின் வேண்டாம். ஊதியம். @ கண் வரைதல் ஓவிய போட்டி. முதல் பரிசு பெற்றான் மாணவன். பார்வையற்ற மாற்றுத்திறனாளி @ தொட்டிக்குள் இலை குவிகிறது. தூய்மையானது சாப்பாட்டுக்கடை. ஏழை வயிறு நிரம்பியது. @ பூமி உருண்டை அதுதான் சிறிதாக இருக்கிறது தொட்டிக்குள் மீன் @  தொண்டன் தீக்குளிப்பு.  கட்சி தவைவர் பெரும் சோகம்.  ஒரு வாக்காள் தோல்வி  ... இவ்வாறு முடிவு எதிர் பாராத திருப்பமாய் இருக்க வேண்டும்

கவிதை 360 ஹைக்கூ க்கள்

  01) ஹைக்கூ ...........  01) ஹைக்கூ  ......................... இது ஜப்பான் கவிதை மொழி என்று சகலரும்b அறிந்ததே. தமிழில் 3அடி கவிதையை 1974 ஆண்டு கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் முதல் முதலில் எழுதினார்.  ...... ஹைக்கூ மரபுகள்  1) தமிழில் 3அடி கவிதையே பயன் படுகிறது. மூன்று அடியும்  மூன்று வாக்கியமாக இருக்க வேண்டும். 3 சொல் அல்ல  2) தலைப்பு இடக்கூடாது  3) முதல் அடி ஒரு கூறு. மூன்றாம் அடி ஒரு கூறு  மூன்றாம் அடியே மிக மிக பிரதானம். இது திடீர் திருப்பமாக, உணர்வாக இருக்க வேண்டும்.  4) படைப்பாளிகள் வார்த்தையை விளக்கக் கூடாது.  5) ஈற்றடி பெயர் சொல்லாக இருக்க வேண்டும்.  ..... மரபு கவிதைக்கு அடுத்து  சற்று கடினமானது. ஹைக்கூ ஆகும். சிலர் 3 வரி எழுதினால் ஹைக்கூ என தவறாக நினைத்து விடுகிறார்கள்

கவிதை 360

 கவிதை ஆர்வலர்களே அடியேன் அறிந்த கவிதை வகைகளும் அதற்கான சிறுவிளக்கமும் அவற்றுக்கு அடியேன் எழுதிய கவிதைகளும் தொடர்ந்து பதியப்போகிறேன். இது தற்கால எதிர்கால கவிதை ஆர்வலருக்கு சிறு தீனி போடும் என நம்புறேன்  @ கவிப்புயல் இனியவன்  1) ஹைக்கூ  2) சென்றியு  3) லிமரைக்கூ  4) ஹைபுன்  5) குறள்கூ  6) சீர்க்கூ  7) கஸல்  என்பவை முதலில் வருகின்றன