கவிதை 360 ஜோக்ஸ் கவிதை

 " கண்ணே என்றாள் கடன்காரன் ஆகிவிட்டேன் "

-------------------------------------------------------------------

" அரும்பிய மீசையுடன் காதலித்தேன் தாடியுடன் அலைகிறேன் "

-------------------------------------------------------------------

" மாற்றம் ஒன்றே நிலையானது மாறி விட்டேன் உன்னை விட்டு "

-------------------------------------------------------------------

" பண்டிகை காலத்தில் ஜவுளி கடை காவலாளி கண்வன் "

-------------------------------------------------------------------

"காதலித்து பார் நெருப்பில் தூங்குவாய் வானத்தில் பறப்பாய்

..... 

நகை சுவை கவிதைவரிகள்....!!!

-----------


புஷ்பத்தை உச்சரித்தார் தாத்தா பல் ஷெட் பறந்தது  

------------


உறக்கத்தில் உண்மைசொன்னார் அரசியல் வாதி 


-----------


வளர்ந்த குழந்தை விசில் ஊதுது பஸ் நடத்துனர் 


-----------


இல்லத்தில் தாக்குதல் குழந்தையும் கணவனும் அழுகை

.... 

நானும் 

சிறந்த பாடகன் ....

குழியல் அறைக்குள் .....

குழிக்கும் போதுவரும்....

நடுக்கத்தால் புதிய புதிய ....

சுரங்கள் எல்லாம் வருகிறது ....!!!


துணிவாக பாடுகிறேன் ....

அரை குறை துணியோடு ....

பாடுகிறேன் -உள்ளே வந்து ....

துவசம் செய்ய மாட்டார்கள் ......

என்ற நம்பிக்கையுடன் .....

பாடுகிறேன் ......!!!


பக்கத்து குழியல் அறையில் ....

எதிர் பாட்டு கேட்கிறது .....

குழித்த அரைகுறையுடன் ....

எட்டிப்பார்த்தேன் -பாடகர் 

குளியல் அறைக்கு ....

கதவில்லாததால்  பாடுகிறார் ....!!!


&

நகைசுவை கவிதை 

கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

கவிப்புயல் இனியவன்

கவிதை 360 சமூக விழிப்புணர்வு கவிதை

கவிதை 360 கிறிஸ்மஸ் வாழ்த்துக்கவிதை

கவிதை 360 தன்னம்பிக்கை கவிதை