கவிதை 360 கஸல் கவிதைகள்

கஸல் கவிதை 


இக் கவிதை பல மொழிகளை கொண்டு ஆராய்ச்சி செய்யப்பட்டுகிறது. இங்கு யான் இது எவ்வாறு எழுதுவது என்று பார்க்கிறேன் 


....


தமிழில் கவிகோ அப்துல் ரகுமான் அவர்கள் நல்ல வடிவம் கொடுத்தார். அதனையே பெருமளவு பயன்படுகிறது. 


.....


பொதுவாக கஸல் காதல் வலியை சொல்லும் கவிதை 

முறை . ( மற்ற வகைகளும் எழுதலாம் )


இதில் 3 சந்தங்கள் குறைந்தது எழுதணும் 

( 5 .7 வகையிலும் எழுதலாம் ) ஒரு சந்தத்துக்கும் 

மற்றையத்துக்கும் தொடர்பு வர கூடாது .


அதிக சொற்கள் பயன்படுத்த கூடாது 

ஒரு வரி நேராக (+) இருந்தால் மற்ற வரி எதிராக இருக்கணும் (-)

3 சாந்தமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படக்கூடாது 

ஆனால் 3 பத்தியும் வெளிப்பதும் தாக்கம் ஒரே கருத்தாக இருக்க வேண்டும் ....


உதாரணத்துக்கு ஒரு கவிதை 

-----

வலமிருந்து ....

இடமாக காதல் ...

தேவதையை சுற்றி ....

வரவேண்டும் .....(+)

நம் காதல் தோஷம் ....

இடமிருந்து வலமாக ....

சுற்றுகிறேன் .......!!!(-)

----- 01

வாடி விழும் பூவின் ....

நெத்து மரமாகி ....

மீண்டும் பூக்கும் ...(+)

நீ வாடித்தான் ....

விழுந்தாய் ......

பூவின் மென்மை கூட .....

உன்னில் இல்லை ....!!!(-)

-----02

அடுத்த ஜென்மத்தில் ....

என் இதயத்தை ....

ஈரமாக படைக்காதே ...(-)

வீரமாக படைத்து விடு ....!!!(+)

-----03

&

கஸல் கவிதை 

கவிப்புயல் இனியவன்


அடியேன் 1800 கஸல் எழுதியுள்ளேன்

....

காகித பூவாக இரு ......

அப்போதுதான் .....

வாட  மாட்டாய் .......!


உன் ......

கண்ணை விட ......

என் .......

கண்ணீர் அழகானது .....!


என் இதயம் .....

மட்டும் தான் ......

இருவருக்காக துடிக்கும் .....

உன்னிடம் இதயம் .....

இல்லாததால் ..........!


&

காதலுடன் பேசுகிறேன்

கஸல் கவிதை 

கவிப்புயல் இனியவன்

.....

 ஐம்புலனை ....

அடக்கும் ஆமையின் ...

ஆற்றல் எனக்கில்லை ...(-)

நான் .....

ஆறறிவு மனிதன் (+)


&

ஆன்மீக கஸல்

கவிப்புயல் இனியவன்

...

நீந்த துடிக்கும்

மீன் குஞ்சு போல் ....

இறை ஆசை .....(+)


வறண்டிருக்கும்

குளம் போல் ......

மனம் ......(-)


&

ஆன்மீக கஸல்

கவிப்புயல் இனியவன்

....

சண்டை போடுவதாயின்...

சட்ட சபையில் போடுங்கள்...

வீட்டில் சண்டை போட்டால்...

சட்டம் தன் கடமையை...

செய்யும்........!!!


சமுதாய கஸல் கவிதை

கவிப்புயல் இனியவன்


^^^^^


பகல் முழுவதும்..

தன்னை கஷரப்படுதி...

உழைக்கிறான்.....

இரவு குடும்பத்தை...

கஷ்ரப்படுத்துகிறான்....!!!


சமுதாய கஸல் கவிதை

கவிப்புயல் இனியவன்


^^^^^


ஆடம்பர வீடு...

அழகாக இருக்கிறது...

வீட்டில் இருக்கும்...

சில்லறை காசு ...

துர் நாற்றம் வீசுகிறது....!


சமுதாய கஸல் கவிதை

கவிப்புயல் இனியவன்

சமுதாய கஸல் கவிதை

---------------------------------


விவசாயி வீட்டில்.....

அடுப்பு எரியவில்லை

வயிறு நன்றாகவே.....

எரிகிறது..........!


நிலம் ....

சேறானால் சோறு.......

வறண்டால்.......

பட்டினி...............!


விவசாயிகளுக்கு.....

பருவ மழை - பன்னீர்

பருவம் தப்பிய மழை....

கண்ணீர்..........!


&

சமுதாய கஸல் கவிதை

கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

கவிப்புயல் இனியவன்

கவிதை 360 சமூக விழிப்புணர்வு கவிதை

கவிதை 360 கிறிஸ்மஸ் வாழ்த்துக்கவிதை

கவிதை 360 தன்னம்பிக்கை கவிதை